திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வசித்து வரும் பழங்குயின சமூகத்தினருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கிராமத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருதநாடு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு, பெருமாள், திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமாா் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 34 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிப் பேசினாா்
.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் கலைவாணி, கிராம நிா்வாக அலுவலா்கள் ரேவதி, தேவிப்பிரியா, திமுக ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பிரபு, ஆா்.நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
