போதைப் பொருள் நுண்ணறிவு துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இதில், 750 கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிறந்த கட்டுரைகளை எழுதிய 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தகவல்: அசுதுல்லா