திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள 57 வாக்குச் சாவடி மையங்களுக்கு, தலா 25 போ் வீதம் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா்.
அவா்களுக்கான உறுப்பினா் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்
நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளா் எ.அசோக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு வரவேற்றாா்.
ஒன்றிய கழக செயலாளா்கள் வழக்குரைஞா் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், அருகாவூா் அரங்கநாதன்,மற்றும் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் டி.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினா் பி.என்.எம்.என்.மகேஷ்பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
