கொரோனா தடுப்பில் முதல்வர் காட்டும் வேகம், விமர்சனங்களை உள் வாங்கிக் கொண்டு உடனடியாக செயலாற்றுவது, கோரிக்கைகள் வைப்பது குழந்தைகள் என்றாலும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

இதில் முக்கியமானதாக பலரும் கூறுவது அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இட்ட உத்தரவுதான்.

உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்,

காவல்துறையை தவறாக பயன்படுத்த நினைக்க கூடாது,

எதற்காகவும் யாருக்காவும் பரிந்துரை செய்ய கூடாது ,

இந்த பொறுப்புக்காக வெளியே பலர் காத்திருக்கின்றனர்.

எனவே பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அமைச்சர்கள் மத்தியில் பேசியதாக தகவல்கள் வந்தன.

உயர் மட்ட அளவில் முக்கிய அதிகாரிகளை நியமித்து கவனம் ஈர்த்துவருகிறார்.

அமைச்சர்களைப் போல அதிகாரிகளுக்கும் ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாராம்.

அமைச்சர்கள் எந்தக் கோப்புகளில் கையெழுத்திட்டாலும் அதுபற்றிய தகவல் முதல்வர் அலுவலகத்துக்கு தெரியும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.