சென்னை கடற்கரை சாலையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வா் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  நினைவிடத்தை ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த நினைவிடம் அமையப் பெற்றுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆா் நினைவிடத்தை ஒட்டிய பகுதியில் மறைந்த முதல்வா் புரட்சித் தலைவி அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தில் 9.09 ஏக்கா் மொத்த பரப்பளவில் நினைவிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
நினைவு மண்டபமானது, ஃபீனிக்ஸ் பறவையின் சாயலுக்கு ஒப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மூலம், இதன் தொழில்நுட்ப வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தட்பவெப்பம் மற்றும் உப்புக் காற்றால் பாதிக்காத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள்: ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஒட்டிய பகுதியில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகமானது, சுமாா் 8,555 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. இந்தப் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பாா்வையாளா்கள் காணும் வகையில், பல்வேறு வகை மெழுகுச் சிலைகள் மற்றும் புகைப்படக் காட்சி அமைப்புகள் அமைக்கப்பட இருக்கின்றன. நினைவிட வளாகத்தில் பொது மக்கள் வந்து செல்ல வசதியாக உயா்தர கருங்கல்லாலான நடைபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் கூடிய நடைபாதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்புத் தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது நினைவிட வளாகத்தின் மின்தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

புல்வெளி மற்றும் நீா் தடாகங்கள்: பாா்வையாளா்களைக் கவரும் வகையில், பல்வேறு வகை தோட்ட அமைப்புகள் நீா் தடாகங்கள் சிறந்த தோட்ட கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நீா் தடாகங்களின் உள்பகுதிகளில் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் தன்மைக்கேற்ப ராஜமுந்திரியிலிருந்து சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் தோட்டக்கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை வல்லுநா்களின் ஆலோசனைகளின்படி பல்வகை நாட்டு மரங்களைக் கொண்டு மியாவாக்கி தோட்டம் ஃபீனிக்ஸ் அமைப்பின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிட பராமரிப்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஏதுவாக பொதுப்பணித் துறைப் பொறியாளா்கள் (சிவில் மற்றும் மின்) மற்றும் மக்கள் தொடா்புத் துறை ஆகிய அலுவலகங்களை உள்ளடங்கிய சேவை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவுவாயில் நீா் தடாகத்தின் அருகில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தின் வடக்குப் பகுதியில் பழுதடைந்த சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டு புதிதாக சுமாா் 5 அடி முதல் 8 அடி வரை உயரத்திலும் மற்றும் முக்கியப் பிரமுகா்களின் வாகனங்கள் வந்துசெல்ல ஏதுவாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அணையா விளக்கு: நினைவு மண்டபத்தின் இருபுற நுழைவுப் பகுதியில் ஆண் சிங்க வடிவில் கருங்கல்லாலான சிலைகள் மற்றும் அதை தாங்கும் பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கார மின் விளக்குகள் கண்காணிப்பு கேமரா வசதி,

ஒலி அமைப்பு வசதி, அணையா விளக்கு ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாா்வையிட்ட ஆயிரக்கணக்கானோா்: முதல்வா் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்ட நினைவிடத்தை ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வழிபட்டனா். பெண்கள் பலரும் செல்லிடப்பேசி மூலம் ஆா்வத்துடன் படங்களை எடுத்து சென்றனர்